Tuesday, November 23, 2010

ஜே .பி .சி ( நாடாளுமன்ற கூட்டு குழு) என்றால் என்ன ?



ஒரு நாட்டின் முதுகெலும்பானபாராளுமன்றம் முடங்கிகிடக்கிறது.முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்பெறவேண்டிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.ஆனால்ஜனநாயகமே கேலிகூத்தாக்கும்வகையில் அரசியல் கட்சிகளின்செயல்பாடுகள் உள்ளன. காங்கிரஸ்அரசின் ஊழல் கறையாக தகவல் அலை கீற்று ஒதுக்கீட்டு ழல்,காமன்வெல்த்விளையாட்டு ஊழல் ,கார்கில் வீடு ஒதுக்கீடு ஊழல் ஆகியவை சந்து சிரிக்கவைத்து கொண்டு இருக்கின்றன.அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் தற்போது கிளம்பியிக்கும் பா. . முதல்வர் எடியூரப்பாவின் 5000 கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு ஊழல் போன்றவையால்சாதாரண மனிதன் மிகவும் ஆச்சரியமுடன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவனாய் பார்க்கிறான் .அன்று முந்த்ரா ஊழலில் தனது துறை தவறு செய்துவிட்டது என்று அன்றைய நிதி அமைச்சர் டி .டி .கிருஷ்ணமாச்சாரி யாருடையவற்புறுத்தலும் இல்லாமல் உடனடியாக தனது பதவியை ராஜினாமாசெய்தார்.அதுபோல் 1956 அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்றுஅன்றைய ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமாசெய்தார்.அப்போது இருந்த அரசியல்வாதிகள் தன்னலம் கருதாதவர்கள் பிறர்நலம் பேணிய மகான்கள் .

சரி ..இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் எப்போது ?காலம் தான் பதில் சொல்லவேண்டும். எதிர்கட்சிகள் தகவல் இரண்டாம் தலைமுறை அலை கீற்றுஒதுக்கீட்டு ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அன்றாடநாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வருகிறார்கள் .இந்நிலையில்நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை என்றால் என்ன ?இதற்க்கு முன்னால்அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைகள் என்ன ?என்பது பற்றிபார்ப்போம்.

.
ஜே.பி.சி., என்றால் என்ன?அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள்அனைத்திற்கும், பார்லிமென்ட் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகாண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப்பளுவைகுறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும்வகையில், மத்திய அரசு பல்வேறு கமிட்டிகளை அமைக்கிறது.இந்த கமிட்டிகள்இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பார்லிமென்ட் நிலைக் குழுக்கள்என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழுக்கள் (எச்..சி.,) என்றும்அழைக்கப்படுகிறது. பார்லிமெண்ட் நிலைக் குழுக்கள் ஆண்டுதோறும்அமைக்கப்படும். ஆனால், எச்..சி., எனப்படும் தற்காலிக பார்லிமென்ட் கூட்டுக்குழுக்கள் (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.

ஜே.பி.சி., அமைக்கப்படும் முறை : ஜே.பி.சி., அமைப்பதற்கு பார்லிமென்டின்இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்கமசோதா நிறைவேற்றப்பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெறவேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசிமுடிவு எட்டப்படும். பார்லிமென்டில் கட்சிகளின் எம்.பி.,க்களின் பலத்தைஅடிப்படையாக கொண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யும் நடைமுறைகடைபிடிக்கப்படுகிறது. தவிர, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள்லோக்சபாவிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்தும் 2:1 என்றவிகிதத்தில் நியமிக்கப்படுவர்.

ஜே.பி.சி.,யின் விசாரணை நடைமுறை : ஜே.பி.சி., அமைக்கப்பட்டவுடன்அதற்கென சில விதிகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படிஜே.பி.சி., செயல்படும். மேலும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளைநிபுணர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். இதற்காக சிறப்பு ஆலோசகர்களும்நியமிக்கப்படுவர்.ஜே.பி.சி.,யி ன் விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறும். ஆனால், விசாரணையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போதுபத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்.

போபர்ஸ் ஊழல்: கடந்த 1987ம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய ஊழலாககூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்தஎதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பார்லிமென்ட் அலுவல்கள் பலநாட்கள் ஸ்தம்பித்தன.மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்கஒப்புக் கொண்டது. நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. மத்திய அரசு அமைத்த ஜே.பி.சி.,யில், காங்கிரஸ்எம்.பி.,க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யைஎதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், ஜே.பி.சி., விசாரணை நியாயமாகநடக்கவில்லை என்று கூறி, விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்கமறுத்தன. இதனால், போபர்ஸ் ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்: கடந்த 1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குவர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1,000 கோடிரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தைவர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்திஅறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்புகோர்ட் அமைத்து விசாரணை துவங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும், விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள்அமல்படுத்தப்படவில்லை.இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒருமெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது. மும்பையை சேர்ந்த பங்கு சந்தைதரகர் கேதன் பரேக்,கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி மோசடி செய்தான்.இதனால், இந்திய பங்கு சந்தை வர்த்தகதில் பலத்த அடிவிழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவதுமுறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கிமற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துவிசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்குவர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வர்த்தகதுறையில் ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரணையிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.


கோலா ஊழல்: இதற்கடுத்து, கடந்த 2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்குதீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாகஎழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. புகார் பற்றிவிரிவாக ஆய்வு நடத்திய ஜே.பி.சி., கமிட்டி, 2004ம் ஆண்டு தனது அறிக்கையைஅரசிடம் சமர்ப்பித்தது.இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்தரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பானநிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துஅரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நடைமுறைகள் எந்த அளவுக்குபின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாதபுதிராகவே உள்ளது.எனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்துஜே.பி.சி., விசாரணை நடத்தினாலும், அதில் எதிர்பார்க்கும் அளவுக்கு தீர்வுகள்எட்டப்படுமா? இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மவுனமே பதிலாகிறது.

Saturday, November 6, 2010

இந்திய சுகாதாரத்தின் சவால்கள் -குப்பையும் பான்பராக் கறையும் .


சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.அதற்கு ஏற்ப புது புது நோய்கள் பரவி வருகிறது .இதற்கெல்லாம் முடிவு என்பது தனிமனித சுகாதாரத்திலும் தனிமனித பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது .இந்த வகையில் இந்திய சுகாதாரத்தை கெடுப்பது குப்பையும் ,பான்பராக் புகையிலை கறையும் என்றே நினைக்கிறன் .

சென்னை எந்த அரசாங்க கட்டிடத்திலும் சரி ஒரு சில தனியார் கட்டிடங்களிலும் சரி மாடி படிகளில் எங்கு பார்த்தாலும் பான்பராக் புகையிலை கறைகளை காணலாம்.அந்த இடங்களை கடக்கும் போது கைகுட்டையால் மூக்கை பிடித்து சென்ற அனுபவம் உங்களில் பலபேருக்கு கிடைத்து இருக்கும் .

இந்தியாவின் சுகாதாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைத்து இருக்கிறது
பான்மசாலா மற்றும் புகையிலை இத்யாதிகள் .சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில்
சுத்தத்திற்கு மிகவும் முன்னுரிமை வழங்கபடுகிறது .சிங்கப்பூரில் ஒரு பாக்கெட்
சிகரட்டின் விலை இந்திய ரூபாய்க்கு ஏழுநூறு ரூபாய் .ஆனால் இந்தியாவில் முப்பது ரூபாய்க்கு கிடைகிறது.சிங்கபூரில் நாம் கண்ட இடங்களில் துப்பினால் அபராதம் விதிக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் சகட்டு மேனிக்கு பன்மசாலாவை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புகிறார்கள்.மும்பை ரயில் நிலையங்களில் மற்றும் மும்பை புறநகர் ரயில்களில் இந்த பன்மசாலா ஆசாமிகள் ரயில்களுக்கு அபிசேகம் செய்வதை நிறைய பார்க்கலாம் .

ஏதாவது புதிய ரயில் பெட்டியை சேர்த்தால் இரண்டு நாட்களில் அதன் நிறம் சிவப்பு கலராகி விடுகிறது .இந்த பன்மசாலா மற்றும் புகையிலையால் வருகின்ற கேடுகளை பற்றி அரசாங்கம் பல வழிகளில் பிரசாரம் செய்து வருவது நமக்கு தெரியும் .அதுபோல் அதான் கேடுகள் குறித்து தெரிந்து இருந்தும் நாம் அதை கடைகளில் விற்பதற்கு அனுமதிப்பது
அரசாங்கமே தனது மக்களுக்கு மெதுவாக கொல்லும் விஷம் கொடுப்பதை போன்றது .பான்பராக் புகையிலை இத்யாதிகள் இந்திய சுகாதாரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சவால் விடுபவை.

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இது போதாது என்று வெளிநாடுகளில் இருந்து கதிரியக்க கழிவுகள் மற்றும் E -Wastage எனப்படும் கம்ப்யூட்டர் கழிவுகள் இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் விற்கபடுகின்றன.அதை இறக்குமதி செய்து மறுசுழற்சி செய்கின்றன சில நிறுவனங்கள்.மறுசுழற்சி செய்ய முடிந்த பொருள்களுடன் மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்களையும் அனுப்புகின்றன வளர்ந்த நாடுகள்.மொத்தத்தில் அவர்கள் குப்பையை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்றி விட்டார்கள்.இந்த விசயத்தில் அரசு மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும்.மறுசுழற்சி செய்ய பெருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க படவேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.அதில் நமது சென்னை மாநகராட்சியின் பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது.என்னதான் அரசாங்கம் செயல்பட்டாலும் குப்பையை அகற்றுவதிலும் சுகாதாரம் பேணுவதிலும் தனிமனித பங்கு இன்றியமையாதது.

சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.

பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும். கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம். மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா மற்றும் சுகாதரமான நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

Friday, November 5, 2010

டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு


TASMAC-Tamil Nadu state marketting corporation ,என்ற இந்த செல்ல பெயர் தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்பும் காமதேனு .மனைவியின் தாலியை அறுத்து எடுத்து விற்றோ அடமானம் வைத்தோ குடிக்கும் குடி மகன்கள் ஏராளமானோர்.குடியால் நடு தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் .குடி குடியை கெடுக்கும் என்று அரசாங்கமே விளம்பரம் செய்துவிட்டு அந்த மதுவை விற்பது பெரிய விந்தை.இதற்க்கு முன்னால் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது .

2003
ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய முதலமைச்சர் .ஜெயலலிதாவால் ஆரம்பிக்க பட்ட டாஸ்மாக் வருடா வருடம் தனது வருமானத்தை பெருக்கி வருகிறது.டாஸ்மாக் வருமானம் பெருகி வருவதை அரசு பெருமையாக கூறி கொள்வதை ஏற்றுகொள்ள முடியாது .

டாஸ்மாக் வருமானம் அதிகரிக்கிறது என்றால் தமிழ் நாட்டில் குடிபழக்கம் அதிகமாகிறது என்று தான் அர்த்தம் .தமிழ் நாட்டில் இன்று கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் குடிபழக்கம் வேகமாக பரவி வருகிறது என்று சமூகவியலார் அச்சம் தெரிவிக்கின்றனர் .ஆனால் அரசு அதை பற்றி கவலை படுவதாக தெரியவில்லை .டாஸ்மாக் கின் 26 வது வருடாந்திர அறிக்கை படி 2003 -2004 ஆண்டு விற்பனை Rs.4,262.58 கோடிகள்.மார்ச் 2009 இல் விற்பனை Rs.12,831.21கோடிகள்.எவ்வளவு வளர்ச்சி ?

தற்போது தீபாவளிக்கு டாஸ்மாக் நிறுவனம் 300 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயித்து உள்ளது .டாஸ்மாக்கின் விற்பனை வளர்ச்சியை பார்க்கும் போது தமிழ் நாட்டு இளைஞர்கள் மிகவும் அதிகமாக குடி பழகத்திற்கு அடிமை ஆகி வருகிறார்கள் .மற்ற அரசு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் டாஸ்மாக் மட்டும் மிக வளர்ச்சி அடைந்து வருகிறது.இதே போல் மற்ற நிறுவனங்களுக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாம் .ஆவின் நிறுவனத்தின் மூலம் புது வகையான பால் இனிப்புகளை பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யலாம் .கோ-ஆப்-டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யும் பட்டு துணிகளுக்கு விற்பனை நிர்ணயிக்கலாம் .ஆனால் அதை தவிர்த்து உடம்பை கெடுக்கும் சமுகத்தை நாசம் செய்யும் மது வகைகளுக்கு இலக்கு நிர்ணயிப்பது சமூகத்தை கெடுக்கும் செயலாகும் .

ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக் கடைகள் மூலம் ஏழைகளிடம் இருந்து பெறப்படும் பணத்தில் தான் இலவச தொலை காட்சி பெட்டி மற்றும் இலவசங்கள் அனைத்தும் வழங்கபடுகிறது.4000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்ட இலவச தொலைகாட்சி திட்டம் போன்றவற்றிக்கு செலவழிக்கப்பட்ட பணம் லச்சகணக்கான தாய்மார்களின் மனைவிகளின் கண்ணீரில் வந்ததாக இருக்கலாம் .செயல் படுத்தும் திட்டங்களை கல்வி ,சுகாதாரம் ,அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றிக்கு செலவிட்டு இருந்தால் உலக தரத்திற்கு இணையான கல்லூரிகள் ,பள்ளிகள் ,மருத்துவமனைகள் ,நவீன சாலைகள் போன்றவற்றை தமிழகம் பெற்றிருக்கும் .

வெறும் லாபத்தையும் அரசு கஜானாவையும் நிரப்ப வேண்டும் என்ற குறிகோளுடன் மட்டுமே செயல்பட்டு விற்பனை இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவது தொடருமானால் டாஸ்மாக் ஊழியர்களே ஒவ்வொரு வீடாக சென்று விற்பனை செய்யும் நிலை ஏற்படும் .அப்போது உலகிலே தமிழ்நாட்டில் தான் அதிகமாக குடிக்கும் இளைஞர்கள் இருப்பார்கள் .அதை கலைஞர் தொலைகாட்சியும் சன் தொலைகாட்சியும் சர்வே எடுத்து ஒளிபரப்பி பெருமை பட்டு கொள்வார்கள் .இந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்க தேன்றுகிறது .

Thursday, November 4, 2010

விஷமாகும் உணவு பொருட்கள்


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாகஉணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்குவழிகளில் உணவுப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகியகாலத்துக்குள் அதிக அளவில் உணவுப்பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்கவேண்டும்என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம்அண்மைக்காலமாக மேலோங்கி வருகிறது.

பொதுமக்களின் உடல் நலத்தை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் பணமுதலைகள் லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள்அண்மையில் டெல்லி யை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அறிவியல்மற்றும் சுற்றுசூழல் மையம் பிரா . ண்டட் தேன்களில் நடத்திய ஆய்வில் சில பயங்கர அதிர்சிகரமான முடிவுகளை வெளியிட்டு உள்ளது .இந்த மையம் டெல்லியில் பல இடங்களில் இருந்து வாங்கப்பட்ட பத்து முன்னணி இந்திய நிறுவனங்களின் தேன்களில் ஆறு வகையான ஆண்டிபயோடிக் அளவுகளை சோதனை செய்தது . oxytetracycline, chloramphenicol, ampicillin, erythromycin, eurofloxacin and ciprofloxacin என்ற இந்த ஆண்டிபயோடிக் அளவுகள் மனித உடலில் அதிகரிக்கும் போது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் .இதில் oxytetracycline,சாதாரணமாக இருப்பதை விட மூன்றிலிருந்து இருபத்தி ஐந்துமடங்கு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது .

இந்த விஷத்தை தான் நமது மக்கள் சாப்பிட்டு வருகிறோம் .இதையெல்லாம்ஆய்வுக்கு உட்படுத்தி கண்காணித்து செயல் பட வேண்டிய Food Safety and Standards Authority of India கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானசெயல் .

பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடுவளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போதுஅவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மைசேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும், தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.

பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள்பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன் ஆக்சிடோசின். இந்த மருந்தை மிகவும்குறைந்தவிலைக்கு அனைத்து மருந்துக் கடைகளிலும் வாங்கலாம். சிலஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சிலநோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போதுமாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாலைச்சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைதாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடுவளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தைஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை.

இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கேபுற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தைத் தினமும் உட்கொள்ளும்மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம். உதாரணமாக 10 ஆண்டுகள்வாழவேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாகசுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவப் பயன்பாட்டைத்தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டதுஎனலாம்.

ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தைமருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்தஅளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக, தனது விஷத்தன்மையைவிஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகள்அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாகமத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிகபருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன. குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய்ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறையேதெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச்சாப்பிடும்போது, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்தியசுகாதாரத் துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக்கூடஒருகாலகட்டத்தில் கண்டுகொள்ளலாம். ஆனால், காய்கறிகளை இனம்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன், நமக்குஎந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாள்கள் சென்ற பின்னர்தான், ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும். விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக் கூடாதுஎன தடை இருந்தாலும், இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாகவே இந்த குறுக்குவழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் | 15-ல் இருந்து | 20-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தானஉரப் பொருள்களைக் காட்டிலும், பலமடங்கு விலை குறைவாகும். பெரியவிளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப் பிரச்னையின் ஆழத்தை அரசுஉணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும்மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும்ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையைஎடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையைநோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.

இறைவா இந்த மக்களையும் இந்த தேசத்தையும் காப்பாற்றும் .......... .......