Saturday, July 10, 2010

தமிழ் நாட்டில் மறைமுகமான பேருந்து கட்டண உயர்வு ...



தமிழ் நாட்டில் ஒரு புத்திசாலிதனமானபஸ் கட்டண உயர்வை செய்துவிட்டுநமது முதல் அமைச்சர் அழகாக ஒருபேட்டி கொடுத்து இருக்கிறார்.அதில் டீசல்பெட்ரோல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பஸ் கட்டண உயர்வு இல்லைஎன்று.சென்னையில் தற்போது ஓடிகொண்டிருக்கும் சொகுசு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணமே ஐந்துரூபாய்.பெரும்பாலான பேருந்துகள் இந்த சொகுசு பேருந்துகளே.ஐந்து சொகுசுபேருந்து வந்தால் ஒரு சாதாரண பேருந்து வருகிறது .அவசரமாக அலுவலகம்செல்ல வேண்டிய சாதாரண நடுத்தர வகுப்பு பயணிகள் என்ன செய்வார்கள்வேறு வழி இல்லாமல் இந்த சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்இப்படியெல்லாம் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்திவிட்டு என்னபேட்டி வேண்டியிருக்கு ?

சும்மா பேருக்குத்தான் இவை சொகுசு பேருந்துகள்.இவை சாதாரண பேருந்துகள்போல் நெரிசலுடன் எல்லா நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன.ஆனால்நமது முதல்வரின் புத்திசாலித்தனமான கவிதைதனமான பதில்கள் எப்படிபாமரனுக்கு புரிய போகிறது.புரிந்தாலும் இவர்கள் அவனை பணம் கொடுத்துவாங்கி விடுவார்கள் .

இவர்களிடம் இதுபற்றி கேட்டால் அடுத்த மாநிலத்தை ஒப்பீடுசெய்கிறார்கள்.அந்த மாநிலத்தின் மக்கள் வருமானம் வேறு அவர்கள் வாழ்க்கைமுறை வேறு.அந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் வேறு.அந்த மாநிலத்தில்டாஸ்க்மாக் வருமானம் கொட்டவில்லை .ஆகையால் ஆட்சியாளர்கள்இங்கிருக்கும் சாதாரண மக்களின் நிலையை சிந்தித்து பார்க்கவேண்டும்சென்னை நகர பேருந்துகள் இப்படி என்றால் வெளியூர் பேருந்துகளை பற்றிசொல்லேவே வேண்டாம்.அந்த அளவிற்கு படுமோசமான பேருந்துகளை இயக்கிவருகிறது அரசு விரைவு பேருந்து கழகம் .மார்த்தாண்டம் மற்றும் சென்னைக்குஅரசு விரைவு பேருந்து கழகம் அல்ட்ரா டீலக்ஸ் ,சூப்பர் டீலக்ஸ் மற்றும்குளிர்சாதன பேருந்து என இயக்கி வருகிறது.

இதில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு குளிசாதன பேருந்தில் பயணம்செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது.
பேருந்துகட்டணம் அறுநூற்றி நாற்பது ரூபாய்.பராமரிப்பு இல்லாததால்இருக்கைகளில் முழுக்க தூசி.பேருந்து ஓட ஆரம்பித்ததும் ஒரே குலுக்கலுடன்பயணிக்க ஆரம்பித்தது .சொகுசு பயணம் என்று நினைத்த எனக்கு அன்றையபயணம் முழுதும் நரக பயணம் என்று ஆகி விட்டது.இவ்வளவு அதிக பயணகட்டணம் கொடுத்து இதில் பயணம் செய்வதற்கு பதில் சாதாரண பேருந்தில்பயணம் செய்யலாம்.இவர்கள் இரவு உணவிற்காக நிறுத்தும் சிற்றுண்டிசாலைகளின் நிலையை சொல்வே வேண்டாம்.இருப்பதிலே மட்டமானசிற்றுண்டி சாலைகளில் நிறுத்துகிறார்கள்.அதிகமாக ரூபாய் செலவு செய்துசுகாதாரமற்ற உணவை சாபிடுவதோடு நோய்களுக்கும் ஆளாகின்றனர்பயணிகள்.

சரி எல்லாம் இருக்கட்டும்,சரியான நேரத்திற்கு சென்னைக்கு வந்து சேருகிறதா? அதுவும் இல்லை.சாதாரணமாக புறவழி சாலையில் பயணிக்க வேண்டிய இந்தவிரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் எல்லா ஊர் பேருந்து நிலையங்களுக்கும்சென்று சாதாரண பேருந்துகளில் ஆள் ஏற்றுவதுபோல் கூவி கூவிஅழைகிறார்கள்.இதனால் பயண நேரம் அதிகமாவதோடு திட்டமிட்டபடிநேரத்திற்கு வந்து சேர முடியவில்லை.

இந்த லட்சணத்தில் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று சொல்லி பேருந்துகட்டணத்தை உயர்த்துவதாக முதல்வர் சொல்லி இருந்தால் வரும் தேர்தலில்காணமல் போயிருப்பார்.எனவே இருக்கின்ற பேருந்துகளை சரியானபராமரிப்பில் இயக்கினாலே மக்கள் மனம் குளிரும் ..... . . .

No comments:

Post a Comment